ஒரு சிறு அறிவிப்பு!

நான் தற்சமயம் வலைப்பதிவுகளில் அதிகம் எழுதுவதில்லை! நான் எழுதிய பழைய பதிவுகளின் சுட்டிகளை இங்கே தொகுத்து அளித்திருக்கிறேன்! முடிந்தால் ஒரு முறை சென்று பாருங்கள்!

இலங்கைதமிழ் மாணவர்களுக்கு உதவுங்கள் ப்ளீஸ்!

இலங்கையில் நடைபெற்ற கோரமான உள்நாட்டு யுத்தம் காரணமாக மிக கடுமையாக பாதிக்கப்பட்டு தம் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து வாழ்வதற்கு எதுவுமற்ற நிலையில் இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி நிலையங்களில் இருந்துவந்த வன்னி , முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டடங்களை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது .

எனினும் தற்போதைய நிலையில் மேற்படி மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கான எந்த ஒரு அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் உள்ளனர் . மேற்படி மாணவர்களின் குடும்பங்கள் நீண்ட காலமாக நலன்புரி நிலையங்களிலேயே தொடர்ந்தும் இருந்து வருவதினால் இம்மாணவர்கள் தமது அன்றாட வாழ்வுக்கே ஏனையோரிடம் கையேந்தி வாழ்கின்றனர் . மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கான ஊக்கம் இருந்தும் போதிய வசதி இல்லாத காரணத்தினால் மன அழுத்ததிற்கு உள்ளான நிலையில் உள்ளனர் .

மேலும் மேற்படி மாவட்டங்களில் இருந்து தென்பகுதிகளில் உள்ள பல்கலை கழகங்களுக்கு தெரிவான மாணவர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது . இந்த மாணவர்கள் தமது கல்வியை தொடர மாதாந்தம் குறைந்த பட்சம் 10,000 ரூபா செலவாகிறது . எனினும் அவர்களின் பெற்றோர்கள் நலன்புரி நிலையங்களில் இருக்கும் நிலையில் , வேறு எவரும் உதவி செய்யாத நிலையில் எமது மாணவர்களுக்கு பல்கலைகழக பட்டப் படிப்பினை தொடர முடியாத நிலையில் உள்ளனர் .

எனவேதான் இந்த மாணவர்கள் தம்மிடமுள்ள ஒரே உடமையான கல்வியை தொடர்ந்து கட்டி எழுப்பவும் சிதைந்துபோன எமது சமுகத்தை புதுவாழ்வு பெறச்செய்யவும் தமக்கான அவசர நிதி உதவியினை தம் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளிடம் இருந்து மிகவும் வேதனையுடன் கோரி நிற்கின்றனர் .
இவ் மாணவர்களுக்கான நிதி உதவியானது அவர்களின் பல்கலைகழக கல்வியினை பூர்த்தி செய்யும் காலம் வரை வழங்கப்படுதல் வேண்டும் .

இந்த நிலையில் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பானது முதல் கட்டமாக 217 பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு தலா 3000 ரூபா வீதம் அவசர நிதி உதவியினை கடந்த வாரம் வழங்கி உள்ளனர் .

மேலும் கிழக்குப் பல்கலைகழகம் , பேராதனை , மொரட்டுவ , ஜெயவர்த்தனபுர , கொழும்பு பல்கலைகழகங்களில் தமது பட்டப் படிப்பை ஆரம்பித்திருக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினர் தலா 5000 ரூபா வீதம் 76 மாணவர்களுக்கு கடந்த வாரம் வழங்கி உள்ளனர் .

ஆனந்தராசா இளங்கோவின் இருதய சத்திர சிகிச்சைக்கான முழு உதவிகளையும் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பே மேற்கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது .

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது பல்கலைகழக கல்வியினை தொடர முடியாமல் தவிக்கும் 900 க்கும் மேற்பட்ட மாணவர்களின் விபரங்களை சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினர் சேகரித்து உள்ளனர் .

இவர்களுக்கான படிப்புச் செலவுக்கான நிதி உதவியினை சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினர் வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களிடம் கோரி நிற்கின்றனர் .

ஒவ்வொரு குடும்பங்களும் ஒரு மாணவனை பொறுப்பேற்பதன் மூலமாகவும் ஒவ்வொரு பொது அமைப்புக்கள் , கம்பனிகள் , கடைகள் போன்றன சில மாணவர்களை பொறுப்பேற்பதன் மூலமும் இந்த மாணவர்களின் தொடர்ச்சியான பல்கலைகழக கல்விக்கு வழி வகுக்கலாம்.

பல்கலைகழக மாணவர்களுக்கு உதவிசெய்யும் வழிமுறைகள் .

ஒரு மாணவருக்கு மாதாந்தம் 5000 - 6000 ரூபா . அண்ணளவாக 50 டாலர்ஸ் / 30 பவுண்ட்ஸ் / 35 யுரோ உதவித்தொகை.

ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்பலாம் அல்லது 3 மாதம் , 6 மாதம் , ஒரு வருடத்திற்கான பணத்தினை சேர்த்து
அனுப்பலாம் .

உதவி செய்ய விரும்புபவர்கள் குறைந்தது ஒரு வருடத்துக்கேனும் உதவி செய்ய வேண்டும் .

வங்கி விபரம்

Name : ITSO ( International Tamil Students Organization )
Bank : HSBC
Branch : Stanmore
Branch Sort Code : 40 - 43 - 46
Account Number : 31434225

SWIFT Code : MIDLGB22

IBAN : GBO3MIDL40434631434225

கணக்கறிக்கை

ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும்.


பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் பின்வரும் இலக்கத்தின் மூலமாக எம்மை தொடர்பு கொள்ளலாம் .

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு
பிரித்தானியா
தொடர்பு எண் : +447551449606
மின்னஞ்சல் முகவரி : itsonet@hotmail.co.uk

ஈனத்தமிழினம் - தமிழினம் பற்றிய என் சிந்தனைகள்



நான் பேஸ்புக்கில் வெளியிட்டது ...
என்று தமிழினம் சிந்தனையாளர்களையும் கல்வியாளர்களையும் ஊக்குவிக்கிறதோ (சினிமாவைத் தாண்டி) அன்றுதான் அது ஒரு வளர்ச்சியடைந்த இனமாக முடியும்!

சினிமா கலைஞர்களை வரவேற்கும் மேற்குலகத் தமிழ்ச்சங்கங்கள் என்று ஒரு பத்து தமிழ் சிந்தனையாளர்களையாவது வரவேற்று கௌரவிக்கிறதோ அன்றுதான் ஒரு சிந்தனைப்பாய்ச்சலை உலகத்தமிழினம் முன்னெடுக்க முடியும்!

மாயைத்”திரை” அன்றுதான் விலகும் .. நிசங்கள் மேடையேரும்... சிந்தனைகள் வலிமை பெரும்.. செயலாற்றுதல் எளிதாகும் ... ஒருங்கிணைவு சாத்தியப்படும்.. வெற்றிகள் வசப்படும்!

அதுவரை காட்டிக்கொடுக்கவும்.. கூட்டிக்கொடுக்கவும் புகழ்பெற்ற மூத்தகுடியென்ற பழியோடே பழம்பெருமை பேசி காலம் கரைத்து ஞாலமெங்கும் செருப்படிபட்டு ரத்தத்தின் ரத்தமென்றும்.. தொப்புள்கொடியென்றும்.. உடன் பிறப்பென்றும் மானமற்று போலி வார்த்தைகளை தாரக மந்திரங்களாக்கி ஊரை ஏய்த்து வாழும் ஒரு ஈன இனமாகவே இது இருக்கும்!

Blog Widget by LinkWithin

அனைவருக்கும் உபயோகமான சில இணையச் சேவைகளின் தொகுப்பு